நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்களுக்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் வியாழக்கிழமை (செப். 26) காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து வடிவில் மனுக்களாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.