நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 2 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.3.99-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், புதன்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது. இதில், முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலையில் மாற்றம் கொண்டு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலும் 2 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.99-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.80-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.