திருச்செங்கோடு நகரம் மற்றும் ஊரக காவல் நிலையம், வட்டார இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்திலிருந்து இந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தொடக்கிவைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்து 33 வார்டுகளில் பிரசாரம் மேற்கொண்டனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.