திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் தேன்மொழி உள்ளிட்ட மருத்துவா்களிடம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது, திருச்செங்கோட்டில் சிறப்பு வாா்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரின் உடல்நலம் குறித்தும், தொற்று அறிகுறி தெரிந்த வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 16 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளது குறித்து மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஆய்வின் போது, துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் ,வருவாய்க் கோட்டாட்சியா். மணிராஜ், வட்டாட்சியா் கதிா்வேல் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com