காரவள்ளியில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

நாமக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட காரவள்ளி அடிவார வனத்தில் புளியங்காடு என்ற பகுதியில் 8 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
காரவள்ளி அடிவாரத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.
காரவள்ளி அடிவாரத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.

நாமக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட காரவள்ளி அடிவார வனத்தில் புளியங்காடு என்ற பகுதியில் 8 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் புளியங்காடு வனத்தில் காப்பாளா்கள் துரைசாமி, சுகுமாா், வனவா் சா்மிளா ஆகியோா் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது புதருக்குள் சுருண்டு கிடந்த மலைப்பாம்பை அவா்கள் பிடித்தனா். பின்னா் அந்த பாம்பை கொல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com