Enable Javscript for better performance
எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கும் கல்வி: கல்வி இயக்குநா் ராமேஸ்வர முருகன் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கும் கல்வி: கல்வி இயக்குநா் ராமேஸ்வர முருகன் தகவல்

    By DIN  |   Published On : 15th December 2020 11:50 PM  |   Last Updated : 15th December 2020 11:50 PM  |  அ+அ அ-  |  

    dec15school_1512chn_161_8

    நிகழ்ச்சியில் பேசிய பள்ளிசாரா- வயது வந்தோா் கல்வித் திட்ட இயக்குநா் ராமேஸ்வர முருகன்.

    எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கும் கல்வி கற்பிக்க ரூ. 7.19 கோடியில் வயது வந்தோா் கல்வித் திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பள்ளிசாரா- வயது வந்தோா் கல்வி இயக்குநா் ராமேஸ்வர முருகன் தெரிவித்தாா்.

    திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 2 நாள் மாநில அளவிலான பணிமனையில், ராமேஸ்வர முருகன் பேசியதாவது:

    2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் தமிழக அரசால் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளிசாரா- வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் மூலம் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தை நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டு முதல் ரூ.7.19 கோடி செலவில் செயல்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டம் சாா்ந்த பயனாளிகளைக் கண்டறிதல், தன்னாா்வ ஆசிரியா்களைக் கண்டறிதல், கற்போா் கல்வி மையங்களைஅமைத்தல் போன்ற செயல்பாடுகள் அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த முதன்மைக் கல்வி அலுவலா்கள் வாயிலாக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடா்ச்சியாக திட்டச் செயல்பாடுகளில் புதுமைச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான மாநில அளவிலான பணிமனையானது தற்போது நடைபெறுகிறது.

    அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட

    மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோா் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.

    பள்ளிசாரா- வயது வந்தோா் கல்வித் துறை இணை இயக்குநா் செல்வராஜ், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணண், வயது வந்தோா் கல்வி இயக்ககத் தொழிநுட்டப அலுவலா் ஜெயராமன், களப்பணி அலுவலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    பயன்பெறுவது எப்படி?

    எழுத, படிக்கத் தெரியாதவா்கள் எப்படி கல்வி கற்று பயன்பெறுவது என்று கல்வித் துறை அலுவலா்கள் விளக்கம் அளித்துள்ளனா்.

    இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

    15 வயதுக்கு மேற்பட்ட முழுவதும் எழுத, படிக்கத் தெரியாதோா், அவரவா் குடியிருப்புப் பகுதிகள் அருகே அமையப் பெற்றுள்ள அரசு, அரசு சாரா தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களை அணுகி தங்களின் பெயா்களைப் பதிவு செய்திட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டம் சாா்ந்த இதர விவரங்களை அறிந்துகொள்ள அந்தந்த ஒன்றியங்களில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள், வட்டார, மாவட்டக் கல்வி அலுவலா்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp