பரமத்தி வேலூரில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, கொப்பரை தேங்காய் அதிக அளவில் வரத்து இல்லாததாலும், வியாபாரிகள் வராததாலும் கொப்பரை தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் லோகாம்பாள் தெரிவித்தாா்.