ராசிபுரம் தொகுதியில் தி.மு.க.சாா்பில் பல்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
திமுக சாா்பில் அனைத்து பகுதிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டன. ராசிபுரம் நகரில் நகர செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான து.அருள் முன்னிலையில், ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக்குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன் தலைமை வகித்தாா்.
இதில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விமா்ச்சித்து பேசினா். இந்நிகழ்வில் மாவட்டபொருளாளா் கே. செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஏ.கே.பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதே போல பிள்ளாநல்லூா் பேரூராட்சி பகுதியிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.