நாமக்கல்
திருச்செங்கோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வாகனச் சோதனை
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா் .
இதில் 70 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு 16 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ. 33,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.