நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாக இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும் குறைதீா் மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.