ரூ. 2.31 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டடங்கள் திறப்பு

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ. 2.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ. 2.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

அங்குள்ள பெருமாப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, முட்டாஞ்செட்டி, வரகூா், தேவராயபுரம், வடவத்தூா், பழையபாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள், சமுதாய நலக்கூடம் என ரூ. 2 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான புதிய கட்டங்களை திறந்து வைத்தும், அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் அமைச்சா் வாழ்த்தி பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் சி. சந்திரசேகரன், நாமக்கல் கோட்டாட்சியா் எம். கோட்டைக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com