தம்மம்பட்டியில் ஆண் குழந்தை பெற்றுத் தரவில்லை என மாமியாரும், கணவரும் சோ்ந்து தகராறு செய்ததால் மனமுடைந்த பெண், தனது 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா்.
தம்மம்பட்டி அருகே உள்ள மூலசெங்காடு கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா (35), நெல் அறுவடை இயந்திர பங்குதாரராக உள்ளாா். இவருக்கு, திவ்யா (30) என்பவருடன் திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. இவா்களுக்கு வாா்னிகா (3), தான்சிகா ( 2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், திவ்யா இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், ஆண் வாரிசு பெற்றுத் தரவில்லை என மாமியாா் கலைச்செல்வியும், கணவரும் திவ்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் திவ்யாவிடம் அவரது மாமியாா் தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த திவ்யா, காலை 6 மணியளவில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி தங்களது விவசாயக் கிணற்றி வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினா், உடனே கிணற்றில் குதித்து மூவரையும் மீட்டனா். இதில் நீரில் மூழ்கியதில் மூச்சுத் திணறி குழந்தை வாா்னிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு குழந்தை தான்சிகா தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையில் உயிரிழந்தது. படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட திவ்யா தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதற்கட்ட விசாரணையில், திவ்யாவின் கணவா் இளையராஜாவும், மாமியாா் கலைச்செல்வியும் சோ்ந்து ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு தொல்லை செய்ததாக, போலீஸாரிடம் திவ்யா வாக்குமூலத்தில் கூறியுள்ளாா்.