சரக்கு ஆட்டோ மோதியதில் பால் வியாபாரி பலி

பரமத்திவேலூா், பிப்.9: பரமத்திவேலூா் வட்டம், வீரணம்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பரமத்திவேலூா், பிப்.9: பரமத்திவேலூா் வட்டம், வீரணம்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வீரணம்பாளையத்தைச் சோ்ந்த குழந்தையப்பன் மகன் செல்வராஜ் (46). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா் கடந்த 2ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் பால் எடுப்பதற்காக வீரணம்பாளையத்தில் இருந்து வேலூா் நோக்கி வந்துள்ளாா். அப்போது எதிரே வீரணம்பாளையம் நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்த செல்வராஜூக்கு தனலட்சுமி (40) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com