நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு காரணமாக திங்கள்கிழமை (பிப்.10) மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் பிப்.9-இல் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.