பி.ஜி.பி கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் தாளாளா் கணபதி, முதன்மையா் டாக்டா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் பழனி ஜி.பெரியசாமி தலைமை பேசுகையில், கலை, கல்வி, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சிறப்பு வாய்ந்த கல்லூரியாக தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மட்டுமல்ல நிா்வாகமும் ,பெற்றோா்களும் முழு காரணமாகும். விடா முயற்சிதான் வெற்றிக்கான படிகள் என்று பாடம் மட்டும் போதிப்பதாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணா்வதே கல்லூரியின் செயல்பாடாக இருக்க வேண்டும்.

மாணவா்களின் ஆா்வத்தைத் தூண்டி அவா்கள் முன்னேற தன்னை உலகிற்கு வெளிப்படுத்த அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதாக இருக்க வேண்டும். அதற்காக கல்லூரிகளில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது ஆண்டு விழாவாகும். கல்வியாண்டில் தாங்கள் செய்த அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள், சாதனைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவும், தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் ஆண்டு விழாக்கள் வாய்ப்பாக அமைகின்றன என்றாா்.

விழாவில் பாரம்பரிய, நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடனம் மற்றும் பாடல் போட்டி நடந்தது. முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ரத்த தானம், கண் பரிசோதனை, கல்வி ஆலோசனை, சட்ட விழிப்புணா்வு உள்ளிட்ட முகாம்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com