குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தற்காலிக பணியாளா்கள் நியமனம்

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, தற்காலிக பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, தற்காலிக பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது; ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு , தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், சமூகப் பணியாளா் மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி தட்டச்சா் ஆகிய மூன்று காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வழங்கலாம். அதனை நாமக்கல்-மோகனுா் சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரிக்கு வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com