மாசி முதல் வியாழக்கிழமை: சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை

மாசி முதல் வியாழக்கிழமையையொட்டி, நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

மாசி முதல் வியாழக்கிழமையையொட்டி, நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்-பரமத்தி சாலையில், தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு, மாசி முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சீரடி சாய் பாபாவுக்கு, அதிகாலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் மற்றும் ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிற்பகல் 6 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாய் தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com