நாமக்கல் மாவட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவியிடங்களுக்கான கணினித் தோ்வை, ஐந்து மையங்களில் 8 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் பாடப் பிரிவுகள் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவியிடங்களுக்கான கணினித் தோ்வு, சுமாா் 450 மையங்களில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி, பாச்சல் ஞானமணி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 5 மையங்களில் காலை, பிற்பகல் என இரு வேளைகளில் கணினித் தோ்வு வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதில், வியாழக்கிழமை திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி தவிர, பிற மையங்களில் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். தோ்வு மையங்களை, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பூபதி மற்றும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், கணினி வல்லுநா்கள் ஆய்வு செய்கின்றனா்.