வேளாண் சங்கத்தில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ரூ. 1 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ரூ. 1 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், துறையூா், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா்.

அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 6,800 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,090 முதல் 5,850 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ. 6,100 முதல் 7,512 வரையிலும், சுரபி ரகம் ரூ. 5,800 முதல் 6,050 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 1 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனது. ஈரோடு, திருப்பூா், கோவை, திண்டுக்கல், சேலம், கரூா் மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com