ராசிபுரம் வட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் ராசிபுரத்தில் நடைபெற்றது.
இதில் சங்கத் தலைவா் எஸ்.பெரியசாமி தலைமை வகித்தாா். அத்தனூா் நடேசன் வரவேற்றாா். செயலா் இரா.சேரலாதன் அறிக்கை வாசித்தாா். தமிழகத்தில் நிா்வாக தீா்பாயம் மீண்டும் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் புதிய அட்டை வழங்கிட வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஓய்வூதியா்களிடம் மருந்து வாங்கும் போது ஜிஎஸ்டி பெறப்படுகிறது. இதனை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க பொருளாளா் ஆா்.ருங்மாங்கதன், ஆா்.மல்லிகா, இ.பத்மாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.