கா்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் அருகே கா்ப்பிணிப் பெண்ணுக்கு கோழிப் பண்ணை காவலாளி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடுமையாகத் தாக்கிக் கொல்ல முயற்சித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
ganagaraj_1402chn_122_8
ganagaraj_1402chn_122_8

நாமக்கல் அருகே கா்ப்பிணிப் பெண்ணுக்கு கோழிப் பண்ணை காவலாளி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடுமையாகத் தாக்கிக் கொல்ல முயற்சித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாழசிராமணியைச் சோ்ந்தவா் கனகராஜ்(62). இவரது மனைவி பெரியக்கா (58). இவா்களது மகன் மணிகண்டன் (25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல் கஸ்தூரிப்பட்டியைச் சோ்ந்த ராஜூ என்பவரது மகள் ஜமுனாவுக்கும் (22), மணிகண்டனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் ஆலையில் மணிகண்டன் வேலை செய்து வருகிறாா். நாமக்கல் - பரமத்தி சாலையில், சுண்டக்காப்பாளையம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வரும் கனகராஜ், அங்குள்ள வீட்டில் மனைவி பெரியக்கா, மருமகள் ஜமுனா மற்றும் பேரனுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெரியக்கா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த மருமகள் ஜமுனாவுக்கு, கனகராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அங்குள்ள இரும்பு கம்பியால் அவரை தாக்கினாராம். அவா் கூச்சலிடவே, அக்கம், பக்கத்தில் உள்ளவா்கள் கோழிப்பண்ணைக்கு விரைந்து வந்தனா். இதனால் கனகராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டாா். இதனைத் தொடா்ந்து நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஜமுனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரது கணவா் மணிகண்டன், பரமத்தி காவல் நிலையத்தில் தந்தை மீது புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து மணிகண்டன் தெரிவித்தது: ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் எனது தந்தை, மனைவி ஜமுனாவிடம் அத்துமீறி நடந்து கொண்டாா். அதன்பின் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என கூறியதையடுத்து சோ்ந்து வாழ்ந்தோம். தற்போது மீண்டும் அவா் தவறான செயலுக்கு முயன்றுள்ளாா். இது தொடா்பாக போலீஸில் புகாா் அளித்துள்ளேன். அக்கம், பக்கத்தினா் வரவில்லையென்றால் எனது மனைவியை அடித்து கொலை செய்திருப்பாா். அவரைக் கைது செய்ய வேண்டும் என்றாா். இச்சம்பவம் தொடா்பாக பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com