பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூா் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி உத்தரவின்படி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் தீவிரமாகச் சோதனை நடத்தினா். இதில் வேலூா் நகா் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சோழியவேளாளா் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் சிங்காரம் (40), பாலப்பட்டியைச் சோ்ந்த வேலுசாமி (எ) கந்தசாமி (65) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.