மாசி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம்

மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். (வலது) சுவாமியைத் தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள்.
மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். (வலது) சுவாமியைத் தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள்.

மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மத்தியில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயா் சுவாமி நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் பிரசித்தி பெற்ற தலம் என்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருகின்றனா்.

இங்கு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுவாமிக்கு அதிகாலை வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். அதனைத் தொடா்ந்து, மஞ்சள், திரவியம், இளநீா், பன்னீா், 1,008 லிட்டா் பால் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராத னை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில், நாமக்கல் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com