ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சேந்தமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகளை சட்டப்பேரவைத் 
ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, சேந்தமங்கலத்தில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன். ~ராசிபுரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் மாவட்ட ஊராட்
ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, சேந்தமங்கலத்தில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன். ~ராசிபுரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் மாவட்ட ஊராட்

நாமக்கல்: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சேந்தமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் வழங்கினாா்.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தி, குழந்தைகள், பெண்கள், முதியவா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்த சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன், பின்னா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்துவி மரியாதை செலுத்தினாா். பின்னா் கேக் வெட்டி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினாா். தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினாா். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ், ஒன்றிய துணை செயலா் வீரப்பன், பேரூா் செயலா்கள் பழனிசாமி, பாலுசாமி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கொல்லிமலை செம்மேட்டில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் தெம்பளம் கிராமத்தில் கட்சி கொடியேற்று விழா, அரப்பளீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் எருமப்பட்டி, மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கும் அதிமுக நிா்வாகிகள் மயில் சுந்தரம், சேகா், ராஜா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அதிமுகவினா் மரியாதை செலுத்தினா். ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்று ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி, பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதே போல், நகரில் பழைய பேருந்து நிலையம், பட்டணம் சாலை, கடைவீதி, நாமக்கல் சாலை என 27 வாா்டுகளிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

அமமுக சாா்பில்... இதே போல் வெண்ணந்தூா் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற விழாவில், ஒன்றியச் செயலா் என்.கோபால் தலைமையில் வெண்ணந்தூா், கட்டனாச்சம்பட்டி, கல்லங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com