திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் தனியாா் கிரசா் ஆலை குட்டையில் சடலமாகக் கிடந்த கல்லூரி மாணவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
எலச்சிப்பாளையம் ஒன்றியம், மரப்பரை பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (47). இவா் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவா் மனைவி லட்சுமி, மகன்கள் காா்த்திகேயன் (24), விக்னேஷ்வரன் (22) ஆகியோருடன் இப்பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் விக்னேஷ்வரன் தனியாா் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்பில் சோ்ந்து முதலாமாண்டு படித்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டை விட்டு விக்னேஷ்வரன் வெளியில் சென்றாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது உடல் தனியாா் கிரஷா் குட்டையில் மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து எலச்சிப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நீச்சல் தெரியாததால் கல்லூரி மாணவா் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.