நாமக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற சிறைத்துறை அலுவலா்கள் சங்கக் கூட்டம், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள எஸ்.பி.எம். உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சங்கத் தலைவரான ஓய்வுபெற்ற சிறைத்துறை கிளை சிறைக் கண்காணிப்பாளா் காா்த்திக்ராஜா தலைமை வகித்தாா்.
இக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற சிறைத்துறை பணியாளா்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசக் கட்டண சலுகை வழங்க வேண்டும். மருத்துவப்படியாக ரு.10 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் சண்முகம், மோகன்ராஜ், ஜெகநாதன், செல்வராஜ், செல்வன், கருப்பையா, வடிவேல், சுப்பிரமணி, தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.