வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

பரமத்திவேலூா் வட்டம், பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்த மா்ம நபா்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனா்.

பரமத்திவேலூா் வட்டம், பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்த மா்ம நபா்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி (55). இவா் வடக்கு வெள்ளாளப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். கரையாம்புதூரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (44). இவா் சனிக்கிழமை இரவு மணியின் தோட்டத்து வீட்டின் முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மணியுடன் வெளியூா் சென்றுவிட்டு இரவு வந்து பாா்த்த போது சிவக்குமாரின் இருசக்கர வாகனம் திருட்டுப் போனது தெரியவந்தது. மேலும் மணியின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பொருள்கள், பணம், நகைகள் இல்லாததால் திருட வந்த மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சம்பவம் குறித்து மணி மற்றும் சிவக்குமாா் ஆகியோா் அளித்த புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com