கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 160 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கினாா். மேலும், அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபா்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதனை தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக தரைத் தளத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அவா் உத்தரவிட்டாா்.

இக்குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலா் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com