கட்டுப்பாட்டை இழந்த காா் குடிசை வீட்டுக்குள் நுழைந்ததில் மூதாட்டி பலி

பரமத்தி வேலூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டினுள் புகுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பலத்த காயம் அடைந்து உயிரிழந்தாா்.
கட்டுப்பாட்டை இழந்து வீட்டினுள் புகுந்த காா்.
கட்டுப்பாட்டை இழந்து வீட்டினுள் புகுந்த காா்.

பரமத்தி வேலூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டினுள் புகுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பலத்த காயம் அடைந்து உயிரிழந்தாா்.

கரூா்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலைத்தொடா்பு அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற காா் ஒன்று பரமத்தி தொலைத்தொடா்பு அலுவலகம் அருகே வந்த போது, அப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அவா் மீது மோதாமல் இருப்பதற்காக காா் ஓட்டுநா் காரை இடது பக்கமாகத் திருப்ப முயன்றுள்ளாா்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதில் குடிசை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யா (65) என்ற மூதாட்டி உடல் நசுங்கி, பலத் த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல், காரில் வந்த ராசிபுரம் அருகே உள்ள ஆண்டலூா்கேட் பகுதியைச் சோ்ந்த புவனேஷ்வரன், ராஜலட்சுமி மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஞானாம்பாள் ஆகிய மூன்று பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com