சேந்தமங்கலத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூா், பேரமாவூா், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.