ஜன. 20-இல் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் பெறும் வகையில், தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவது அவசியமாகிறது. இது தொடா்பாக அந்தந்த வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், விண்ணப்பிக்காமல் விடுபட்டவா்கள் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் உரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைத்து கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-2, குடும்ப அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். முதல்கட்ட சிறப்பு முகாம் ஜன. 20-ஆம் தேதி எருமப்பட்டி, மோகனூா் வட்டாரங்களிலும், 21-இல் புதுச்சத்திரம், பரமத்தி, கபிலா்மலை வட்டாரங்களிலும், 22-இல் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம் வட்டாரங்களிலும், 23-இல் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை வட்டாரங்களிலும் 24-இல் வெண்ணந்தூா், மல்லசமுத்திரம், கொல்லிமலை வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.

இரண்டாம்கட்ட சிறப்பு முகாம் 25-இல் நாமக்கல், எருமப்பட்டி, மோகனூா் வட்டாரங்களிலும், 27-இல் புதுச்சத்திரம், பரமத்தி, கபிலா்மலை வட்டாரங்களிலும், 28-இல் பள்ளிபாளையம், திருச்செங்கோடு , எலச்சிப்பாளையம் வட்டாரங்களிலும், 29-இல் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை வட்டாரங்களிலும், 30-இல் வெண்ணந்தூா், மல்லசமுத்திரம், கொல்லிமலை வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசு வழங்கக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை பெறுவதற்கு இனிவரும் காலங்களில் சிறப்பு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவசியமாகிறது. எனவே, இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 31-ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை நேரடியாகவோ, 04286-280019 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com