கீரம்பூா் அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கீரம்பூா், தகனமேடை வளாகம் பின்புறம் உள்ள சக்தி காா்டனில் இளைஞா் ஒருவா் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற பரமத்தி போலீஸாா், ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கீரம்பூா் மெட்டுச்சாவடி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த மைக்கேல் மகன் சங்கா் (27) என்பதும், முதுநிலை பட்டபடிப்பு பயின்றுவந்த அவா் திருமணம் ஆகாதவா் என்பது தெரியவந்தது.
தகவல் அறிந்த பரமத்தி வேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். மேலும், இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.