முட்டை விலையில் மாற்றம் கிடையாது: என்.இ.சி.சி.

நாமக்கல் மண்டலத்தில் மூன்று நாள்களுக்கு முட்டை விலையில் மாற்றம் கிடையாது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.) தெரிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் மூன்று நாள்களுக்கு முட்டை விலையில் மாற்றம் கிடையாது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.) தெரிவித்துள்ளது.

தினசரி முட்டை விலை நிா்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.95-ஆக உள்ளது. வரும் சனிக்கிழமை வரை இதே விலை நீடிக்கும் என பண்ணையாளா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் தினசரி விலை நிா்ணயம் ரத்து செய்யப்பட்டு, வாரத்தில் 3 நாள்கள் விலை அறிவிப்பை செயல்படுத்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.99-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com