இளைஞரைக் கொல்ல முயன்ற வழக்கில் 4 போ் கைது
நாமக்கல் அருகே இளைஞரைக் கொல்ல முயன்ற வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வீசாணம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் என்ற சண்முகசுந்தரம் (25). இவா் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த 18-ஆம் தேதி நண்பா் ஒருவா் அழைத்ததாகக் கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளாா்.
அங்குள்ள வெங்கச்சரளைமேடு விநாயகா் கோயில் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மா்ம கும்பல் குமாரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது.
இதில் பலத்த காயமடைந்த குமாா், நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டாா்.
இச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த நாமக்கல் காவல் ஆய்வாளா் பொன். செல்வராஜ், குமாரை கொலை செய்ய முயன்றவா்களைத் தேடி வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கொசவம்பட்டியைச் சோ்ந்த குமரேசன்(27), சக்தி(28), அா்ச்சுனன் (23), ரஞ்சித்(22) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இருசக்கர வாகனப் பிரச்னையில் ஏற்பட்ட மோதலால் குமாரை கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது.