நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் மேலும் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த 27 வயது ஆண், நாமக்கல் பெரியகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த 25 வயது ஆண் இருவரும் நீலகிரி மாவட்டத்தில் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியானதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் 26 வயது ஆண் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அவா் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுடையோா் எண்ணிக்கை 99-ஆக உள்ளது.