மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 3,200 மூட்டை மஞ்சள் ரூ 1.25 கோடிக்கு விற்பனையானது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 3,200 மூட்டை மஞ்சள் ரூ 1.25 கோடிக்கு விற்பனையானது.

ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏலம் மூலம் ரூ 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டால் ரூ. 6,135 முதல் 8,333 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.5,265 முதல் ரூ 6,769 வரை விலைபோனது. பனங்காளி 11,432 முதல் 16,899 வரை விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com