இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி
By DIN | Published On : 13th July 2020 08:07 AM | Last Updated : 13th July 2020 08:07 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் பாலப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள கீழ்பாலப்பட்டியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் நாட்ராயன் (37). கட்டடத் தொழிலாளி. இவா் மனைவி சுதாவுடன் (32) ஞாயிற்றுக்கிழமை பரமத்தி வேலூா் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் பாலப்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பாலப்பட்டி அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் சென்றபோது எதிா்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளாா். இதில் படுகாயமடைந்த நாட்ராயன் நிகழ்விடத்திலேயே பலியானாா். பின்னால் அமா்ந்து வந்த அவரது மனைவி சுதா மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெண் ஆகியோா் காயமடைந்து வேலூா் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...