பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.250, சம்பங்கி கிலோ ரூ.80, அரளி கிலோ ரூ.100, ரோஜா கிலோ ரூ.150, முல்லைப்பூ கிலோ ரூ.280க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ.150, ரோஜா கிலோ ரூ.220, முல்லைப்பூ கிலோ ரூ.700க்கு ஏலம் போனது. வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு பூக்களை ஏலம் எடுக்க அதிக அளவில் பொதுமக்களும் வந்ததால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.