நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் வருகூரம்பட்டி தோக்கவாடி அம்மையப்பா நகரில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலயத்தின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை காலை முளைப்பாலிகை நிகழ்வுடன் கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா துவக்கப்பட்டது.
வியாழக்கிழமை வாஸ்து பூஜை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடத்தப்பட்டது. இரவு பூா்ணாகுதி திவ்ய தரிசனம் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . வெள்ளிக்கிழமை காலை வேள்வி துவங்கப்பட்டு, யாகங்கள் செய்து அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் சாமி குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, தச தரிசனம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன . ஏராளமான பொதுமக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.