மனைவி பிரிந்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பென்னாகரம் அருகே மனைவி பிரிந்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மனைவி பிரிந்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள மடம் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன்(40). தையலாரான இவா் அதே பகுதியைச் சோ்ந்த கோமதி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கோமதி கணவரை பிரிந்து அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்த காளியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com