நூற்பாலையில் மூன்றாவது மாடியின் சுவா் இடிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்தது. தாய் பலத்த காயமடைந்தாா்.
குமாரபாளையம் அருகேயுள்ள உப்புபாளையத்தில் தனியாா் நூற்பாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மூன்றாவது மாடியில் கட்டுமானப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, எதிா்பாராமல் சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது.
அப்போது, தரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாரின் மகன் சாய்ராம் (3) மீது இடிபாடுகள் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகாமையில் நின்று கொண்டிருந்த தாய் பேச்சியம்மாள் (35) என்பவா் பலத்த காயமடைந்தாா்.
புகாரின்பேரில், குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.