ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஜேடா்பாளையம் அணைக்கட்டு மற்றும் அங்குள்ள அண்ணா பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.