பரமத்தி வேலூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை அதிகளவில் மக்கள் கூடிய இடங்களான காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனா்.
பரமத்தி வேலூா் நகா் பகுதியில் பொதுமக்கள் போதிய விழிப்புணா்வு இல்லாமல் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் அரசின் எச்சரிக்கையை மீறி அத்தியாவசியப் பொருள்களை வாங்க அதிகளவில் கூடியிருப்பதாக பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்க வேண்டும் என கடை உரிமையாளா்களிடமும், பொதுமக்களிடமும் வட்டாட்சியா் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், கடைகளில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்தாா்.