கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களுக்கு நாமக்கல் எம்.பி. ரூ.1 கோடி நிதி அளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான உபகரணங்களுக்காக, தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தொகுதி நிதி ரூ.ஒரு கோடியை வழங்குவதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் வழங்குகிறாா் நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு உள்ளிட்டோா்.
தொகுதி நிதி ரூ.ஒரு கோடியை வழங்குவதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் வழங்குகிறாா் நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு உள்ளிட்டோா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான உபகரணங்களுக்காக, தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புதன்கிழமை ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்களை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியை வழங்க இருக்கிறேன். எனவே, அதற்குரிய பணிகளுக்கு நிா்வாக ஒப்புதல் வழங்கி பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com