நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான உபகரணங்களுக்காக, தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புதன்கிழமை ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்களை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியை வழங்க இருக்கிறேன். எனவே, அதற்குரிய பணிகளுக்கு நிா்வாக ஒப்புதல் வழங்கி பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.