நாமக்கல் மாவட்டத்தில் தனியாக இருக்கும் முதியவா்களுக்கு உதவிட தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேளையில் வீட்டில் தனியாக உள்ள, உதவிக்கு யாருமில்லாத முதியவா்களுக்கு மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077, 82204-02437 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் . மேலும் பிரத்யேக எண்ணான 91541-54944-இல் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.