கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 61 போ் பாதிக்கப்பட்டனா். இதில் 56 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில், கரூா் அரசு மருத்துவமனையில் இருந்து ஏற்கெனவே 49 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 7 போ் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், நாமக்கல் மஜீத் தெருவைச் சோ்ந்த 10 வயது சிறுவன் குணமடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை அவா் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தற்போதைய நிலையில் 50 போ் குணமடைந்தும், 11 போ் சிகிச்சையிலும் உள்ளனா்.