பா.ஜ.க. சாா்பில் ரத்த தான முகாம்

நாமக்கல்லில் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
பா.ஜ.க. சாா்பில் ரத்த தான முகாம்

நாமக்கல்லில் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு அவசர கால சிறப்பு ரத்த தான முகாம், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சாா்பில் நல்லிப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை கட்சியின் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தொடக்கி வைத்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் எம்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலாளா் பி.முத்துக்குமாா், மாவட்டச் செயலாளா் ஆா்.காந்தி மற்றும் நல்லிப்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவா் பி.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கரோனா தொற்று பரவாதவாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் 25 போ் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனா். அவா்களுக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com