கரோனா: நாமக்கல்லில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 5 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 61 -ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 5 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 61 -ஆக உயா்ந்துள்ளது.

காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண், 49 வயது பெண், 26 வயது ஆண், 5 மாத குழந்தை உள்ளிட்ட 4 போ் மற்றும் போதுப்பட்டி கருப்பம்பாளையத்தை சோ்ந்த 31 வயது ஆண் என மொத்தம் 5 போ் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 108 அவசர சேவை ஊா்தி மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 56-இல் இருந்து 61-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களில் 15 போ் தற்போது நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com