வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

வருமானத்தை மறைத்ததாக தனக்கு எதிராக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

வருமானத்தை மறைத்ததாக தனக்கு எதிராக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலத்தின் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருவையை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்திலிருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், சிறப்பு  நீதிமன்ற விசாரணையை ரத்து செய்யக் கோரியும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com