மூன்று மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்:  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

அரசு மணல் குவாரிகள் இயங்காததால் மணல் லாரிகள் வேலையின்றி உள்ளன. இதனால் மூன்று மாதத்திற்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என
மூன்று மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்:  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

நாமக்கல்: அரசு மணல் குவாரிகள் இயங்காததால் மணல் லாரிகள் வேலையின்றி உள்ளன. இதனால் மூன்று மாதத்திற்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து நாமக்கல்லில் அச்சம்மேளனத்தின் தலைவர் செல்ல. ராசாமணி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா தொற்றால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 47 நாட்களாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக சுங்க கட்டணம் வசூல், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்காதது, மேலும் தமிழக அரசு டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியதால் கூடுதலாக லிட்டருக்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மட்டுமன்றி, மணல் லாரி தொழில் செய்வோரும் பாதிப்படைந்துள்ளனர். 

மணல் குவாரிகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 55,000 மணல் லாரிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதத்திற்கான காலாண்டு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவை எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

அதற்கேற்றார்போல் தமிழகத்தில் கூடுதல் அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com